எச்சில் துப்பியவரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..!

உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூரில் உள்ள கோட்வாலி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் அனுராக்(28). நேற்று முன்தின இரவு பான் மசாலா போட்டிருந்த இவர், அதனை அருகே இருந்த வீட்டினருகே துப்பியுள்ளார். இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் லக்கி, அனுராக்கை கண்டித்துள்ளார். இந்த பிரச்சினை வாக்குவாதமாக மாறி, பின்னர் ஆத்திரத்தில் அனுராக்கை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார் லக்கி.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அனுராக்கை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தீவிர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அனுராக் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலைமறைவாக உள்ள லக்கி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News