மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று காலை (ஆக.19) திருப்பரங்குன்றத்துக்கு சென்றது.
அப்போது பசுமலை, மூலக்கரை அருகில் வடக்கு மற்றும் தெற்கு திசைகளை இணைக்கும் நோக்கில் உயிர் அழுத்த மின்சார கம்பி தாழ்வாக சென்று கொண்டிருந்தது.
அரசுப் பேருந்து மீது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் அந்தக் கம்பி அறுந்து விழுந்தது. இதை அறிந்த ஒட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். ஓட்டுநர் சுதாரித்து நிறுத்தியதால் நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.
இது தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சம்பவத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து மின்கம்பிகளை சீரமைத்தனர்.