வயலுக்குள் கவிழ்ந்த அரசு பேருந்து: ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் காயம்!

மதுரை அருகே அரசு பேருந்து வயலுக்குள் கவிழ்ந்து ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, பச்சேரி கிராமம் இந்திரா நகர் பகுதியில் கடந்து செல்லும் பொழுது ஓட்டுனர் ஜெயபிரபு-வின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயலுக்குள் கவிழ்ந்தது.

பேருந்துக்குள் சிக்கியவர்களை கிராம மக்கள் விரைந்து வந்து மீட்டனர். ஓட்டுனருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News