குப்பையில் இரண்டு நாட்களாக அழுது உயிருக்கு போராடிய குழந்தை: துணிச்சலுடன் மீட்ட பெண்!

பூந்தமல்லி, ராமானுஜ கூட தெருவில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று உள்ளது இதன் அருகிலேயே குப்பை கொட்டும் இடம் உள்ள நிலையில் இந்த பகுதியில் இருந்து பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டதையடுத்து பூனை குட்டி கத்துவதாக அங்கு வசிக்கும் மக்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.

இந்த நிலையில் இன்று சத்தம் அதிகமானதையடுத்து அந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று துணி இல்லாமல் குப்பைத் தொட்டியில் எறும்புகள் உடலில் மொய்த்த நிலையில் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த யுவராணி என்ற பெண் உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் பெண் குழந்தையை மீட்டு பூந்தமல்லி உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.

அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அந்த குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை வீசி சென்ற நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

மேலும் குழந்தையை இரண்டு தினங்களுக்கு முன்பு இங்கு வீசி சென்றதும் இரண்டு தினங்களாக குழந்தை அழுதபடி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை வீசி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிறந்த சில தினங்களே ஆன பெண் குழந்தையை ஈவு இரக்கம் இல்லாமல் குப்பை தொட்டியில் வீசிய நிலையில் உயிருக்கு போராடிய குழந்தையை பெண் ஒருவர் துரிதமாக இறங்கி மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த குழந்தைகள் உடலில் காயங்களும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News