தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை: விஜய்!

தமிழ்நாட்டிக்கு நல்ல தலைவர்கள் தேவை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடிகர் விஜய் ஊக்கத்தொகை கொடுத்து வாழ்த்தினார். இரண்டாம் ஆண்டாக இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்டம் சென்னை, நீலாங்கரையில் இன்று தொடங்கப்பட்டது.

நான்குநேரியில் ஜாதிய கொடுமையால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னதுறை அருகில் அமர்ந்தார்.

பின்னர், விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:

”தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. துறையை தேர்ந்தெடுப்பதுபோல அரசியலையும் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என பேசினார்.

RELATED ARTICLES

Recent News