ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி கடலில் மூழ்கியது.
ராமேஸ்வரம் மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் மீன்பிடி விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதாக அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
படகு நடுக்கடலில் மூழ்கியதில் படகில் இருந்த நான்கு மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால் விசைப்படகின் உரிமையாளர் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.