தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர், இந்தியன், ஜெண்டில் மேன், அந்நியன் என்று பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார்.
தோல்வியை பார்க்கவே பார்க்காத இயக்குநர் என்று புகழப்பட்ட இவர், தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் என்று இரண்டு தொடர் தோல்விப் படங்களை கொடுத்துள்ளார். இவ்வாறு இருக்க, இவர் அடுத்ததாக, எந்த நடிகருடன் கூட்டணி வைக்க உள்ளார் என்று, பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
தற்போது அதற்கான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க, ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். இது, ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.