தாம்பரம் அருகே கவனக் குறைவாக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது வடமாநில இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை ரயில் மோதிய விபத்தில் வடமாநில இளைஞர் உயிரிழந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு நேரில் கண்டவர்கள் தகவல் அளித்தனர்,
சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
பின்பு இறந்தவரிடம் கிடைத்த ஆதார் கார்டை பார்த்த போது அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபு ராம் என்பதும் கவனகுறைவாக தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.