கேரளா மாநிலத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை – கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து கோவை வரும் பொது மக்கள் காய்ச்சல் பரிசோதனை, உள்ளிட்ட சோதனைக்கு பின் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.