படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளித் திடலில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மாயாவதி ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வின்போது விடுதலை சிறுத்தலைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.