குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதிகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் வசித்து வரும் நித்தியானந்தம் (65) இவரது மனைவி ஆவடையம்மான் (56). நித்தியானந்தம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராகவும் முன்னாள் திமுக கிளைச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். தம்பதிகளுக்கு குழந்தை இல்லை இதனால் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் இணை பிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று இரவு இவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து உறவினர்களிடம் பேசிவிட்டு உறங்கச் செல்வதாக கூறி வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வழக்கமாக நித்யானந்தம் வீட்டிற்கு பால் ஊற்றும் பால் வியாபாரி அழைத்துள்ளார். வீட்டுக் கதவும் திறந்தே கிடந்துள்ளது வெகு நேரமாக அழைத்தும் இருவரும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர் மேலும் பூச்சி மருந்து வாடையும் அடித்துள்ளது இதனால் அக்கம் பக்கத்தினரை அழைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
இருவரையும் பரிசோதித்தபோது நித்தியானந்தம் இறந்தது தெரிய வந்தது. ஆவுடையம்மாளை பார்த்த போது மயக்க நிலையில் இருந்ததை அறிந்து அவரை மீட்டு உறவினர்கள் உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்திலேயே ஆவடையம்மாளும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் உறவினர்களை மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவம் குறித்து நாகையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் நித்தியானந்தத்தின் சகோதரர் பாண்டித்துரை அளித்த புகாரின் பேரில் சம்பவம் குறித்து விசாரித்த போது இருவரும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்ததாகவும் மேலும் நித்தியானந்தத்திற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததும் இதன் காரணமாக விஷ மருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து உறவினர்கள் தெரிவித்த போது இறந்த கணவன் மனைவி இருவரும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வந்ததாகவும் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர் தங்களுக்கு முடியாத காலத்தில் இருவரும் சேர்ந்து இறந்து போவதாகவும் அவ்வப்போது பேசி வந்ததாக தெரிவித்தனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்திலும் தனக்குப் பின்னால் தனது மனைவியை பார்த்துக்கொள்ள பிறரை தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்திலும் கணவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொட்டியபட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.