கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதை அருந்தியவர்களுக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், நேற்று (ஜூன் 20) மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40-ஆக இருந்தது. மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு திடீரென கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடும் வயிற்று வலி இருப்பதாகவும் கூறியதால், பரபரப்பான சூழல் காணப்பட்டது. அவர்களுக்கு மருத்துவர்கள் உடனுக்குடன் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றும் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 21) காலை நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதில், 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.