ரூ. 5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் போலீசார் கைது செய்தனர்.
கமுதி அருகே வீடுகட்டுபவரின் சொந்த இடத்தில் சவுடு மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழவில்லானேந்தல் கிராமத்தை சேர்ந்த குமரவேல் என்பவர் அவரது சொந்த இடத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கு சவுடு மண் அள்ளுவதற்காக புதுக்குளம் கிராம நிர்வாக அலுவலர் சித்ராவிடம் அனுமதி கேட்டு மனு செய்துள்ளார்.
இதற்கு அனுமதி வழங்க சித்ரா 10,000 ரூபாய் லஞ்சம் கேட்தாக குமரவேல் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதயடுத்து போலீசார் வழங்கிய ரசாயணம் தடவிய 5,000 ரூபாயை கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர் வேல்முருகனிடம் குமரவேல் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேல்முருகனை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்து அவரையும் அப்பணத்தை வாங்கச் சொன்ன கிராம நிர்வாக அலுவலர் சித்ராவையும் கைது செய்தனர்.