பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை இராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் பிரியங்கா (27) இவரது கணவர் காவலர் சேகர் இராயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய வருகிறார்.

இருவரும் காதலித்து கடந்ந ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டு இராயபுரம் தம்பு லைன் காவலர் குடியிருப்பில் கடந்த நான்கு மாதங்களாக குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் கணவர் சேகர் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது மனைவி பிரியங்கா வீட்டில் ஹாலில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக சேகர் மனைவியின் உடலை கீழே இறங்கி பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ராயபுரம் போலீசாருக்கு சேகர் தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News