ரயில் பிரேக் ஷூ தாக்கி விவசாயி உயிரிழப்பு!

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் பிரேக் ஷூ கழன்று விழுந்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள வட்டிவயல் கிராமத்தின் ரயில்வே தண்டவாளத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலில் ப்ரேக் ஷூ திடீரென கழன்று விழுந்தது.

அப்போது ரயில் தண்டவாளம் அருகே உள்ள விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி சண்முகவேலு (61) என்பவர் முகத்தில் பட்டத்தில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அதன் பின்பு ரயிலை நிறுத்தி ரயில்வே போலீசார்கள் சண்முகவேலுவின் உடலை மீட்டு மானாமதுரைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News