தமிழக சட்டபேரவை இன்று கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கபட்டது.
தொடர்ந்து கள்ள குறிச்சி விஷசராயம் அருந்தி முப்பதுக்கும் மேற்பட்டோர், மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இரங்கல் தீர்மானத்தில் பேசிய பேரவை தலைவர் அப்பாவு,
கள்ளகுறிச்சியில் ராசாயணம் கலந்த சாராயம் அருந்தியதன் காரணமாக 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதை அறிந்து பேரவை ஆழ்ந்த இரங்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துகொள்கிறது. இது போன்ற சமூகத்தை பாழ் படுத்தும் குற்றங்களை இரும்பு கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய மருத்துவ உதவிகளை செய்ய முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாகவும் அப்பாவு தெரிவித்தார்.
தொடர்ந்து கள்ளகுறிச்சி விஷசாராயம் அருந்தி இறந்தவர்கள் மறைவுக்கு பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.