சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார்

முன்னாள் அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கே.சி பழனிசாமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன் மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருப்பது குறித்து அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். சீமானின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News