சென்னை – புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

சென்னையில் கடந்த சில நாட்களாக மதிய நேரங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் விட்டு விட்டு மாலை இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் வெயில் வீசியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் இரவு 12 மணி வரையிலும் கடும் புழுக்கம் நிலவியது பிறகு வானிலை முற்றிலும் தலைகீழாக மாறி கடும் காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பெய்தது.

குறிப்பாக சென்னையில் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, கோயம்பேடு, அண்ணா நகர், முகப்பேர், அமைந்தகரை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட பகுதிகளிலும் சென்னையின் புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய போரூர், பூந்தமல்லி, மதுரவாயில், அம்பத்தூர், தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.

குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய பூந்தமல்லியில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

நேற்றைய தினம் சென்னையில் நல்ல மழை பெய்ததால் காலை வேளையில் சென்னை முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News