கார் டயர் வெடித்து விபத்து: ஒன்பது மாத குழந்தை உயிரிழப்பு!

கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒன்பது மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தீபக் அழகப்பன் தெய்வானை தம்பதி சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட நேற்று (அக்.25) இரவு சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு வாழப்பாடி அருகே சென்றபோது காரின் டயர் திடீரென வெடித்த நிலையில் கார் தடுமாறி தரைப்பாலம் பக்கவாட்டு சுவரில் பலமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நெருக்கிய நிலையில் தம்பதியின் 9 மாத ஆண் குழந்தை அதி பவ் வைரவன் எதிர்பாராத விதமாக நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனார்.

மேலும், உடல் முழுவதும் படுகாயம் அடைந்த தம்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெய்வானையின் வீடு சேலம் அழகாபுரத்தில் உள்ளது. பண்டிகையை கொண்டாட சேலம் வந்தபோது இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.

சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்த தம்பதி இன்னும் 30 நிமிடம் பயணம் செய்திருந்தால் வீட்டிற்கு பாதுகாப்பாக சென்றிருக்கலாம். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES

Recent News