கத்தியால் குத்தி தம்பி; அண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் மணக்காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் அருணாச்சலம் (வயது 53) இவருக்கும் தம்பி காசி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்தில் கொட்டகை அமைத்த காசி அதற்காக மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மின் இணைப்பு வழங்குவதற்கு அண்ணன் அருணாச்சலம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இந்த பிரச்சனை தொடர்பாக அண்ணன் தம்பியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தம்பி காசி அண்ணன் அருணாச்சலத்தின் இடுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். அதேபோல் காசியின் உறவினர் பீமனும் தாக்கியுள்ளார் இதில் படுகாயம் அடைந்த அருணாச்சலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி காசி (வயது 48) அவரது உறவினர் பீமன் (வயது 47) ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News