கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். இவர் சமீபத்தில் இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும் திமுக தலைவர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார்.
உமா கார்கி கைது செய்வதற்கு சில மணி நேரங்கள் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிறந்த ஊடக செயல்பாட்டாளர் என்ற விருது வாங்கினார்.

அவதூறு வழக்கில் கைது செய்யபட்ட உமா கார்கி கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக உமா கார்கி மீது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உமா கார்கியை மீண்டும் கைது செய்து சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைத்தனர்.