பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பெரவள்ளூர் போலீசார், கபிலன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 1-ம் தேதி பாஜக பொதுக்கூட்டத்தில், முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, அவர் மீது பாலியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.