திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளுக்கு 17 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி மற்றும் பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் லாரியில் இருந்த ரேஷன் அரிசி மற்றும் பருப்பு மூட்டைகள் கீழே சரிந்து விழுந்தன.
அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்றும் பள்ளத்தில் சிக்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் ஏற்கனவே நகராட்சி மூலம் குடிநீர் பைப் லைனை அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாததால் பள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
சாலை மற்றும் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் தரமான முறையில் அமைக்காததே இது போன்ற விபத்து ஏற்பட காரணம் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.