ரயில்வே பாலத்தின் அடியில் மாட்டிக்கொண்ட அரசு பேருந்து…..கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இன்று காலை திருப்பத்தூரில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி சென்ற அரசு பேருந்து பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது.

இந்த பேருந்தை மீட்க ஓட்டுநர் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. ஓட்டுநர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியும் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து பாலத்திற்கு அடியிலே சிக்கி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர்.

இந்த பாலத்திற்கு அடியில் வழக்கமாக செல்லக்கூடிய பேருந்து மாற்றுப் பேருந்து இயக்கியதால் மாட்டிக் கொண்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எந்த அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News