தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்; தூய்மை பணியாளர்களை கௌரவித்த தொண்டு நிறுவனம்!

தஞ்சாவூரில் தீபாவளி பண்டிகை களை கட்ட துவங்கியுள்ள நிலையில் நகரத்தை தூய்மையாக வைக்க உதவும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் தஞ்சையில் உள்ள ஜோதி தொண்டு நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தஞ்சை விளார் ஊராட்சி மற்றும் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை அவர்களது இல்லத்துக்கே நேரில் சென்று வரவேற்று வாகனத்தில் பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம், வெற்றிலை, பாக்கு, இனிப்பு வழங்கி பாரம்பரிய முறைப்படி வரவேற்று தூய்மை பணியாளர்கள் விரும்பிய புத்தாடைகளை அவர்களாகவே தேர்வு செய்து அவற்றை வாங்கி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர். மேலும், அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறி ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது.

RELATED ARTICLES

Recent News