கடற்கரை- தாம்பரம் இயங்கும் மின்சார ரயில்கள் நாளை (செப்.15) பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தாம்பரம் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இந்த நேரத்தில் கடற்கரை – தாம்பரம் இடையே இயங்கும் அனைத்து மின்சார ரயில்களும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படும்.
அதேநேரம், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக கடற்கரையிலிருந்து காலை 8.35, 9.38,10.10,10.40,11.20, ល់ 12, 5, 1.05,1.30, 2.30, 3.10, 3.45, மாலை 4.10, 4.30, 4.50, 5.10, 5.50 மணிக்கு பல்லாவரத்துக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கமாக பல்லாவரத்திலிருந்து காலை 9.35, 10.35, 11.05,11.35, 5 12.10, 12.55 1 1.55, 2.25, 3.20, № 4, 4.40, 5.05, 5.20, 5.40, 6.05, 6.40 மணிக்கு கடற்கரைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும்.