ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ரயில்வே பெண் போலீஸ்!

மதுரை ஐயர் பங்களாவை சேர்ந்த ஜெயலெட்சுமி மதுரை ரயில்வே கோட்டத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் இவருக்கு திருச்சி ரயில்வே பணிக்கு மாறுதல் வழங்கியதாக தொிகிறது.

இதனையடுத்து ஜெயலெட்சுமி மருத்துவ விடுப்பில் சென்றதாகவும் ஆனால் அதனை ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்பும்படி உயர் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு உண்டான ஜெயலெட்சுமி தனது மகள் பவித்ரா மற்றும் மகன் காளிமுத்து ஆகியோருடன் மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் தேனூர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News