எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 13 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று விசைப்படகையும் அதிலிருந்த 13 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையின் முதற்கட்டம் விசாரணைக்கு பின் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.