பாலியல் வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!! இனி பெண்கள் அடையாளங்கள்..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு., கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்., தன் மீதான புலன் விரைந்து முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் படி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதன் பேரில்., இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு தொடர்பாக சமர்பிக்கப்பட்டிருந்த அறிக்கையில்., பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்கள் மற்றும் பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி., பாலியல் வழக்கில் பாதிக்கப்படும் குழந்தைகளின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரிகளை கடுமையாக தாக்கினார்.

மேலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் செயல்படும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News