சேகர் கம்முலா இயக்கத்தில்., ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் “குபேரா”.
இப்படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளதா..? அல்லது தோல்வியை சந்தித்துள்ளதா..? மற்றும் ரசிகர்களின் கருத்து என்ன என்பதை பற்றி இந்த பதிவில் படிக்கலாம்.
படத்தின் குட்டி ஸ்டோரி :
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்காக பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகிறது. இதனை குளோபல் நிறுவனத்தின் தொழிலதிபர் நிரஜ், கைப்பற்ற நினைத்து அமைச்சரை சந்திக்கிறார். ஆனால் அவர் சில கட்டுப்பாடுகளை விதிக்க., நாகார்ஜுனா மூலம் அதனை கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார்.
இப்படத்தில் நேர்மையான அதிகாரியாக இருக்கும் நாகர்ஜுனா செய்யாத தவறுக்காக சிறைக்கு சென்று பின் இவர்களுடன் சேர்ந்து அந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற முயலுகிறார்., அதாவது ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும்., ஒவ்வொரு பிச்சைக்காரர்களை தேர்வு செய்து அவர்களை பிணாமியாக்கி பணத்தை சம்பாதிக்கின்றனர். பின்னர் அவர்கள் வேலை முடிந்தவுடன் பிச்சைக்காரர்களை கொள்வதை வாடிக்கையாக வைத்து விடுகிறார்கள்.
அதற்கு காரணம் அமைச்சர் விதித்த கட்டளை., அப்படி தான் இதில் தனுஷ் சிக்கி கொள்கிறார். சிக்கிய சில நாளிலேயே தனுஷ் அங்கு நடப்பதை பார்த்து நிரஜ் மற்றும் நாகார்ஜுனாவிடம் இருந்து தப்பி செல்கிறார். ஆனால் தனுஷ் வங்கி கணக்கில் 10 ஆயிரம் கோடி இருக்க, அவர் இல்லாமல் அந்த பணத்தை எடுக்க முடியாமல் போகிறது. இதன் பின்ன என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
மக்கள் கருத்து :
படம் ஆரம்பத்தில் மொக்கையாக இருந்தாலும் க்ளைமேக்சில் சுவாரசியமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படத்தில் அனைவரும் தங்களது நடிப்பை அட்டகாசமாக நடித்துள்ளனர். குறிப்பாக தனுஷ்.. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஒருவர் பிச்சைக்காரனாக நடிப்பது ஆச்சரியத்திற்குரியது என சொல்லலாம்.
படத்தின் கருத்து :
இந்த உலகமானது பணக்காரர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தமல்ல என்றும், யாசகம் கேட்பவர்களும் சாமானிய மனிதர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பதை சேகர் கம்முலா அழகாக இயக்கியுள்ளார்.