திருமணமான இளம் பெண் தற்கொலை..!! வாட்ஸ் அப்பில் உருக்கமான ஆடியோ..!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சேவூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரையை உட்கொண்டு இளம் பெண் தற்கொலை -உடலை கைப்பற்றி -சேவூர் போலீசார் விசாரணை. கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு. தந்தைக்கு whatsapp மூலம் உருக்கமான பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சி.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியில் வசித்து வரும் கவின்குமார் மனைவி ரிதன்யா (வயது 27). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணமாகியுள்ளது.  இதற்கிடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  

இந்நிலையில் அவிநாசியில் இருந்து காரை ஓட்டி வந்த ரிதன்யா மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள்ளேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சேவூர் போலீசார் ரிதன்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக  அவிநாசி 
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை செய்து கொண்ட பெண் கண்ணீர் மல்க உருக்கமாக பேசிய ஆடியோ தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் மாமனார் மாமியார் தன்னை சித்திரவதை செய்ததாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது என்றும் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறி தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 3 மாதத்துக்குள் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News