இயக்குநா் அமீா் தயாரிப்பாளா் ஞானவேல் இடையேயான பிரச்சனை சமீக காலமாக சமூகவலைதளங்களில் வைரலாகும் பேசுபொருளாகி கொண்டிருக்கிறது.ஞானவேல் கூறிய கருத்துக்கு பலரும் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா். இதற்கு வருத்தம் தொிவிப்பதாக பதிலளித்த ஞானவேலுக்கு பலரும் பதிலடி கொடுத்துவருகின்றனா்.
அதன்படி இதற்கு இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி பருத்திவீரன் 350 வது நாள் என்றுபோஸ்டரை வெளியிட்டு,அதனுடன் ஒரு பகிரங்க கருத்தையும் பதிவிட்டுள்ளாா்.அதில் “பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ… அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!
நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்…! அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா… கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு
அப்புறம் “பருத்திவீரன்” திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்…அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க… நீங்கதான், “அம்பானி பேமிலியாச்சே..!” காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!!” என்று குறிப்பிட்டுள்ளார்.இப்பதிவை பாா்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது
கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.