சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாரணி சத்யா (26). இவர் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை சாப்ட்வேர் என்ஜினியர் தாரணி சத்யா, வேலைக்கு செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயில் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்டபடியே தண்டவாளத்தை கடந்து சென்றதால் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் தாரணி சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.