இந்தியன் 2 படக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்..!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கல்பாக்கம் அருகில் இருக்கும் ஒரு கோட்டையில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது அங்கிருந்த கிராம மக்கள் சிலர் படக்குழுவினரிடம் நன்கொடை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து போலீசாருக்கு படக்குழுவினர் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராம மக்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News