வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், வாரிசு படத்தை ஓடவைக்க விஜய் சில விஷயங்களை செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. வாரிசு படத்தை பார்க்க யாரும் தியேட்டருக்கு வராத காரணத்தால் தனது மன்றத்து ரசிகர்களை களமிறக்கி, அவர்கள் மூலம் டிக்கெட் வாங்கி, விநியோகம் செய்ய கூறியுள்ளாராம்.
அதன் பிறகும் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தினால் விஜய் சற்று கடுப்பில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தகவல் உண்மைதானா? என்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை.