2009 -ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இலியானா. கோலிவுட்டில் பெரிதளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார். பின்னர் விஜய் நடித்த நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இந்த படம் பெரிதளவில் பேசப்பட்டாலும், இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமலே இருந்தது. இதனிடையே இவர், நீண்ட நாட்களாக நடிக்காதற்கு காரணம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படம் ஒன்றில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம், ஆனால் பல நாட்கள் ஆகியும் கால் ஹீட் கொடுக்காமல் இலியானா போக்கு காட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த தாயாரிப்பாளர், இவர் மீது தென்னிந்திய திரைப்பட சம்மேளத்தில் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக தென்னிந்திய படங்களில் இலியானா நடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான தகவல் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.