திமுக கூட்டணியில் இருந்தால் தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்போம் என்று இதனால் தங்களது கூட்டணியில் எந்தவித குழப்பமும் ஏற்படாது என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மாலை மதச்சார்பின்மை காப்போம் என்ற பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்., கிருஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை ஒன்றிய அரசு பதிவிட்டு மதப்பிரிவினையை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுவதாக சாடினார். எனவே தான்., மதச்சார்பின்மையை காக்க விசிக குரல் எழுப்பி வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்., அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர்ந்த நெருக்கடியை சுட்டிக்காட்டி., இஸ்லாமியர்களுக்கு எதிராக விதிக்கப்படும் சட்டங்களை விசிக ஒருபோது பார்த்துக்கொண்டு இருக்காது என்றும்., அவர்களுக்காக எழும் முதல் குரல் தங்களுடையது என்றார்.
மேலும் தமிழக அரசின் கூட்டணியில் இருந்தாலும் சில கருத்துக்களை முன்வைத்து பேசுவோம் என்றும்., அதை மறைத்து பேச வேண்டிய கட்டாயத்தில் தங்கள் இல்லை என்றும் திட்டவட்டமாக திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.