அமெரிக்கா ஈரான் தாக்குதல்..!! அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!! அடுத்த கட்ட மூவ்..?

ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்கள் மீது “ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்” மூலம் அமெரிக்க திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் இதற்கும் ஈரான் அடிப்பணியாவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் பேரிழப்பை சந்திக்க கூடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல்., ஈரானின் ராணுவ மற்றும் அணுஷக்தி தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில்., தீவிர மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா பி2 ஸ்பிரிட் ரக விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதலை நடத்தியது. அதற்கு “ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிட்டது. மேலும் இதற்கும் ஈரான் அடிப்பணியாவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் பேரிழப்பை சந்திக்க கூடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. மேலும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை தடை செய்ய முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது..

RELATED ARTICLES

Recent News