தக்லைப் பட வசூல் இவ்வளவு தானா..? விரக்தியில் படக்குழு..!!

கடந்த ஜூன் 5ம் தேதி., மணிரத்தினம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா அபிராமி ஜோஜு ஜார்ஜ், நாசர் மற்றும் அசோக் செல்வன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “தக்லைப்”. இப்படம் பிரம்மாண்ட ஹிட் கொடுக்க வில்லை என்றாலும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது என சொல்லலாம்.

ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க பலருக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது என சொல்லலாம். மறுபக்கம் இப்படத்தை பலரும் விமர்சனம் செய்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர். இந்த ட்ரோல்களை பார்த்த பின்னர் இப்படத்தை காண இருந்த ஒருசில ரசிகர் கூட்டமும் தியேட்டருக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில் நேற்று வரை மட்டுமே 88கோடியா வசூல் செய்துள்ளது. 100 கோடியை இப்படம் வசூல் செய்யுமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

மறுபக்கம் நடிகர் கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் பிரிந்தது என அவர் பேசிய கருத்து கர்நாடக மாநிலங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் அந்த மாநிலங்களில் படம் திரையிடப்படவில்லை. படத்தின் வசூல் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News