கடந்த ஜூன் 5ம் தேதி., மணிரத்தினம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மற்றும் அபிராமி போன்றோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “தக்லைப்”.. இப்படம் பிரம்மாண்ட ஹிட் கொடுக்க வில்லை என்றாலும் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது எனலாம்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது நடிகர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது என அவர் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்திற்கு கர்நாடக வர்த்தக சபை, நடிகர் கமலஹாசனை மன்னிப்பு கேட்ககோரி கடிதம் அனுப்பியிருந்தது.
இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுக்கவே, இப்படம் கர்நாடக மாநிலங்களில் வெளியிட தடைவிதிக்கப் பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கமல்ஹாசன் மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கர்நாடக வர்த்தக சபை வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம். கமல் ஹாசன் என்ன மொழியியல் வல்லுநரா..? என கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மகேஷ் ரெட்டி என்பவர் கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடகாவின் இச்செயல் கமல் ரசிகர்களிடையே பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிட் மனு தாக்கல் :
ரிட் மனு தாக்கல் என்பது ஒருகோரிக்கையை மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதே ரிட் மனு தாக்கல் எனப்படும். ஒருவர் அடிப்படை விதிகளை மீறி செயல்பட்டாலோ அல்லது அதிகாரிகளின் போக்கை கண்டித்தும் இம்மனுவை தாக்கல் செய்யலாம்.