திருவண்ணாமலை வழக்கில் திருப்பம் – நீதிபதி அதிரடி உத்தரவு!

கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீது உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் சாதி பெயரை சொல்லி கண்மூடித்தனமாக தாக்கினர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தங்களை தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், சாதி பெயரை குறிப்பிட்டு தாக்கிய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டு தொகையை காவலர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை அவர்களை பணியிட நீக்கம் செய்யவும் உத்தரவிட்டனர். சம்பவம் நடந்து சுமார் 7ஆண்டுகளுக்கு பிறகு, காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News