உலகெங்கும் தடை விதிக்கப்பட்ட இந்தியாவில் மட்டும் செயல்பட்டு வரும் சோடியம் ஃபார்மேட் முறையில் தயாரிக்கப்படும் சோடியம் ஹைட்ரோ சல்பைட் பவுடர் தயரிப்பு நிருவனமான தமிழ்நாடு கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் உற்பத்தி நிறுத்தம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூரில் நிலத்தடி நீரை மையமாக வைத்து, தமிழ்நாடு கெமிக்கல் என்ற தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஜப்பானில் உள்ள மிட்ச்சி பூசி நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஆலை அமைக்கப்பட்டது.
இந்த ஆலையில் சோடியம் ஃபார்மேட், சோடியம் ஹைட்ராக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற ரசாயன கலவைகள் தயாரிக்கப்பட்டது. இதனால் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் இதன் ஆலையில் இருந்து வெளியேறிய புகையால் பெண்களுக்கு கருகலைப்பு ஏற்பட்டது..
பிற நாடுகளில் சோடியம் ஹைட்ரோ சல்பைட் தயாரிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்., இந்தியாவில் தயாரிக்கப்படும் பவுடர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளானதால் நிறுவனத்தை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயர்நீதி மன்றத்திலும் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம்., நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகவும் 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்து.
எனவே ஆலையின் உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக ஆளை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் எனவும் வரும் 23ஆம் தேதி மதுரையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரியத்தில் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறு தொழிலாளர் உதவி ஆணையாளர் மைவிழிச்செல்வி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தற்போது ஆலையின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதி கிராம மக்கள் மட்டுமின்றி காரைக்குடி பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர் 50 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி எந்த பயனும் அளிக்காத நிலையில் தற்போது ஆலையின் இந்த முடிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..