விண்ணை முட்டிய பூண்டின் விலை!

பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது.

தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நமது அன்றாட உணவில் பூண்டுக்கு முக்கிய இடம் உண்டு. பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News