ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!

384 அத்தியாவசிய மருந்துகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது. அத்தியாவசிய மருந்துகளின் விலை 11 சதவிகிதத்திற்கு மேல் உயர உள்ளது.

காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை உயர்த்த வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News