அந்த ஒரு போன்கால்..!! வசமாக சிக்கிய ஜெயராம் ஜெகன் மூர்த்தி..!! இனி அடுத்த ஆக்ஷன்..?

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, உடன் பணி புரிந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

அப்பெண் வசதியான பெண் என்பதால்., கடும் எதிர்ப்புகள் திரும்பிய நிலையில் அந்த காதல் ஜோடிகள் திருவள்ளூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது அப்பெண்ணின் வீட்டாரை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் மக்களின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத அப்பெண்ணின் தந்தை (வனராஜா) கூலிப்படை மூலம் திட்டம் தீட்டி வாலிபரின் தம்பியை கடத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த இளம் காதல் ஜோடிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக செயல்பட்டு அந்த சிறுவனை மீட்டுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஜெகன்மூர்த்தியை விசாரிக்க சென்ற போது., அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைய விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையிலும் பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அம்மனுவை விசாரணை செய்த நீதிபதி, சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழக கூடுதல் காவல் துறைத் தலைவர் எச்.எம். ஜெயராம், கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் போலீசாரின் சந்தேக நபராக இருப்பதால் இவ்வழக்கை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

ஜெகன் மூர்த்தி வழக்கில் சிக்கியது :

தனது மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத வனராஜா., மகளை மீட்டு தரக்கோரி நண்பர்களிடம் உதவிக்கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன் என்ற நபர் மகேஸ்வரி என்ற பெண்ணை வனராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்து., உனது மகள் வேண்டுமென்றால் இவர்கள் சொல்லும்படி கேள் எனக்கூறியுள்ளார்.

பின்னர் மகேஸ்வரி என்ற பெண் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோரிடம் காதல் திருமணம் குறித்து கூறி அப்பெண்ணை கடத்த முடிவு செய்துள்ளனர்.

மகேஸ்வரி போட்ட திட்டம் படி ஏடிஜிபி ஜெயராம், எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்தி மற்றும் கூலிப்படையினர் அப்பெண்ணை கடத்த சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் இல்லாததால் அப்பெண்ணின் கணவரின் தம்பியை கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த காதல் தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர்.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் மகேஸ்வரி கொடுத்த வாக்கு மூலம் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. அதில், ஏடிஜிபி ஜெயராம் தன்னுடைய உறவினர் என்றும், அவருடைய போலீஸ் வாகனத்தை வைத்து தான் இந்த கடத்தல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News