வெறிச்சோடி காணப்படும் மீன் மார்க்கெட்..!! வேதனையில் வியாபாரிகள்..!!

ஆடி முதல் வாரம் கிருத்திகை என்பதால் சென்னை பட்டினம்பாக்கம் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிரது… மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது…

வார விடுமுறை நாட்கள் என்றாலே வழக்கமாக பட்டினம்பாக்கம் லூப் சாலை முழுவதும் மக்கள் வெள்ளத்தில் களைகட்டியிருக்கும். அதிலும் ஆடி மாதம் முதல் வாரத்தில் வாகனங்கள் செல்வதற்கே நெரிசலாக இருக்கும்… ஏனெனில் ஆடி மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அத்துடன் வீடுகளில் கூழ்வார்த்து அம்மனுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். இந்த அம்மன் படையல்களில் மீன் உணவுக்கு முக்கிய இடமுண்டு, ஆகையால் ஆடி மாதம் மீன்கள் விற்பனை அதிகமாகவே இருக்கும்..

ஆனால் இன்று ஆடி மாதத்தின் முதல் வாரத்தில் கிருத்திகை விரதம் கடைபிடிப்பதனால் பட்டினம் பாக்கம் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்துடன் இந்த வாரம் மீன்களின் வரத்தும் குறைவாக இருப்பதாக மீன் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். வரத்து குறைவால் மீன்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.. குறிப்பாக வஞ்சிரம், பாறை, வவ்வால், கொடுவா, ஷங்கரம், நாக்கு உள்ளிட்ட மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது என மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்…

RELATED ARTICLES

Recent News