திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு..!! முதற்கட்ட விசாரணையில் சிபிசிஐடி..!!

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு. முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள்..

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்தை அப்பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வனராஜா (அப்பெண்ணின் தந்தை) கூலிப்படை மூலம் தனுஷின் தம்பியான சிறுவனை கடத்தியுள்ளார்.

இந்த கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சம்மந்தப்பட்ட நிலையில்., அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிபிசிஐடி போலீசார் தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக அவர் மீது குழந்தை கடத்தல், வீட்டில் அத்துமீறி நுழைதல், பணத்திற்காக ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News