கையில் பீர் பாட்டிலுடன் காரின் மேற்கூரையில் காதலியுடன் பயணித்த காதலன் கைது!

தாம்பரம் ஜீஎஸ்டி சாலையில் கையில் பீர் பாட்டிலுடன் காரின் மேற்கூரையில் காதலியுடன் பயணித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு கருப்பு நிற கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த காரின் மேற்கூரை திறக்கப்பட்டு அதிலிருந்து வெளியே வந்த ஜோடி அதிலிருந்த ஆண் நபர் கையில் பீர் பாட்டிலை எடுத்து குடித்துக் கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் வீடியோ காட்சியுல் இருக்கும் கார் எண்ணை கொண்டு தேடி வந்த நிலையில் துரைப்பாக்கம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த காரை மடக்கி பிடித்து பெருங்குடியை சேர்ந்த காதலன் சஞ்சய் (23) என்பரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

RELATED ARTICLES

Recent News