தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி-2024 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த புத்தக காட்சி ஜன.21 வரை மொத்தம் 19 நாள்கள் நடைபெறவுள்ளது. வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.