பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் 23 பயணிகள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (ஆகஸ்ட் 26) முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து மற்றும் டிரக் ஒன்றை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். இரண்டு வாகனங்களில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு பயங்கரவாதிகள் கொண்டு சென்று சுட்டு படுகொலை செய்தனர். இதில் 23 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.